பாலியல் தொழிலுக்கு மகளை விற்ற போதை அப்பா

பாலியல் தொழிலுக்கு மகளை விற்ற போதை அப்பா
பாலியல் தொழிலுக்கு மகளை விற்ற போதை அப்பா

குடிபோதையில் 14 வயது மகளை, பாலியல் தொழிலுக்காக விற்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்துராஜூ கிருஷ்ணா. சலவைத் தொழிலாளியான இவர், எப்போதும் போதையில்தான் இருப்பாராம். இவரது வீட்டருகே புதிதாகக் குடிவந்தவர் சுதாராணி. இவருக்கு வாடகை வீடு பார்த்துக்கொடுத்தவர் புத்துராஜூ. இந்த நட்பின் அடிப்படையில் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் கொடுத்துள்ளார். இந்நிலையில் சுதாராணி தனக்கு வேண்டிய சிலருக்கு பெண்களை ஏற்பாடு செய்து வந்த விஷயம் புத்துராஜூக்கு தெரிய வந்தது. 

வழக்கம் போல ஒரு நாள் சுதா ராணியிம் பணம் கேட்டிருக்கிறார் புத்துராஜூ. ‘அடிக்கடி பணம் கேட்டா, நான் எங்க போறது?’ என்றார் அவர். ’எனது 14 வயது மகளை உனது தொழிலுக்குத் தருகிறேன். எனக்கு பணம் கொடு’ என்றிருக்கிறார் புத்து. பத்தாயிரம் ரூபாய் பேசி, அதில் மூவாயிரம் ரூபாயை கொடுத்தாராம் சுதா.
இதையடுத்து அந்தச் சிறுமியை தனது வாடிக்கையாளர்கள், பவன், ஜவஹர், வஹீது ஆகியோரிடம் கொடுக்கச் சென்றுள்ளார் சுதா. அப்போது அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டார். சிறுமியும் ஏற்றப்பட்டார். வழியில் மது வாங்கி குடித்துள்ளனர். இரண்டு பீர் பாட்டில்களை காலி செய்த சுதா, அந்த சிறுமியையும் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தார். இதையடுத்து சுதாவுக்கும் அவரது வாடிக்கையாளர்களுக்கும் பணப் பிரச்னை தொடர்பாகத் தகராறு. இதனால் கடுப்பான அவர்கள், சுதாவையும் அந்தச் சிறுமியையும் நடுரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். 

அப்போது ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி, தாங்கள் அம்மா- மகள் எனவும் குடும்ப சூழ்நிலை காரணமாகப் பிழைப்புத் தேடி அலைவதாகவும் கூறியதை லாரி டிரைவர் நம்பினார். அந்த நல்ல டிரைவர் அவரது சொந்த ஊரான ஜக்கையாபேட்டையில் கொண்டு போய் இருவரையும் குடிவைத்தார். கேட்டவர்களிடம் ’இவங்க எனக்கு தூரத்து சொந்தம்’ என்று தைரியமாகப் பொய் சொன்னார்.

இதற்கிடையில் சிறுமியின் அப்பா புத்து ’மீதி பணம் என்னாச்சு?’ என்று தொடர்ந்து நச்சரிக்க, சுதா கண்டுகொள்ளவில்லையாம். இதையடுத்து புத்துராஜூ போலீசில், ‘என் மகளை காணவில்லை’ எனப் புகார் கொடுத்தார். பிறகுதான் நடந்த விவரங்கள் போலீசுக்குத் தெரிய வந்திருக்கிறது.
இப்போது புத்துராஜூ, சுதா ராணி ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். மீட்கப்பட்ட சிறுமி, நலகொண்டாவில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com