மே 4 முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

மே 4 முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
மே 4 முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரயில், விமானம் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் வரும் 20-ம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள் சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இதேபோல், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com