அறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்!

அறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்!
அறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்!

விமானப் பணிப்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர் அறையில் பூட்டி வைத்து அவரை கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.

லுப்தான்ஸா விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் அனிசியா பட்ரா (வயது 39). தெற்கு டெல்லியை சேர்ந்த இவர், கணவர் மயங்க் சிங்வியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

இதைத் தற்கொலை வழக்காக டெல்லி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விமான பணிப்பெண்ணின் தந்தையும் ராணுவ அதிகாரியுமான பத்ரா, தனது மகள் சாவுக்கு அவள் கணவர்தான் காரணம் என்றும் வரதட்சனை பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் சிங்வியை கைது செய்து சிறையிலடைத்தனர்.


 
அனிசியா மற்றும் அவர் கணவர் சிங்கி ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். அனிசியா, தற்கொலை செய்வதற்கு முன் தனது தோழிகள் சிலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் தனது கணவர் அறையில் பூட்டி வைத்து கொடுமை செய்வதா கவும் இதுபற்றி போலீஸில் புகார் அளிக்கும்படியும் சிலருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

மற்றொரு தகவலில், தன்னை கணவர் பூட்டி வைத்திருப்பதாகவும் தன்னைச் சந்திக்க வருமாறும் தோழி ஒருவருக்கு தகவல் அனுப்பியுள் ளார். இந்த தகவல்களின் அடிப்படையில் தங்கள் விசாரணைக்கு உதவுமாறு போலீசார் கூறியுள்ளனர். 

(மயங்க் சிங்வி)

இருந்தும் தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகு வரதட்சணை விவகாரம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் கூறுகின்றனர். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com