இந்திய விமான தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் கட்டுப்பாட்டு அறை அழிந்தது!

இந்திய விமான தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் கட்டுப்பாட்டு அறை அழிந்தது!

இந்திய விமான தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் கட்டுப்பாட்டு அறை அழிந்தது!
Published on

இந்திய விமானப்படையின் தாக்குதலில் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின், கட்டுப்பாட்டு அறை முற்றிலும் சிதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குத லால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது. இந்தத் தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக விளங்கிய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறை முற்றிலும் சிதைந்தது. அதில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பாலாகோட், சகோத்தி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com