ஆம்புலன்ஸுக்கு மறுப்பு: தந்தையை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் சென்ற மகன்!

ஆம்புலன்ஸுக்கு மறுப்பு: தந்தையை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் சென்ற மகன்!

ஆம்புலன்ஸுக்கு மறுப்பு: தந்தையை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் சென்ற மகன்!
Published on

உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டம் காரணமாக, நோய்வாய்ப்பட்ட தந்தையை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் சென்றார் மகன். இருந்தும் அவர் பரிதாபமாக இறந்தார். 

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பருகி கிராமத்தைச் சேர்ந்தவர், ரகுவர். இவர் தந்தை லோகா சிங். வயது 68. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று காலை உடல்நிலை மோசமானது. இதையடுத்து மீரட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு சிங்கை கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். ஆனால், மீரட் கொண்டு செல்ல ரகுவரிடம் பணமில்லை. இதனால், ஆம்புலன்ஸில் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள சாஸ்திரி சாக் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு அருகில் வரும்போது, ஜுட்கி பகுதியில் கடும் டிராபிக் ஜாம்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் அமைப்புகள் நடத்திய போராட்டம் காரணமாக வாகனங்கள் எங்கும் நகரமுடியவில்லை. இதையடுத்து தந்தையை தோளில் சுமந்து கொண்டு ரகுவர் மருத்துவமனைக்கு ஓடினார். மூச்சிரைக்க வேகவேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தார் சிங்கை. பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

‘போராட்டக்காரர்களிடம் ஆம்புலன்ஸை விடுமாறு கெஞ்சினேன். ஆனால் ஒருவருக்கு கூட இரக்கம் வரவில்லை. என் கதறலை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆம்புலன்ஸுக்குள் என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரை நான் காப்பாற்றியாக வேண்டும். என் தோளில் தூக்கிக்கொண்டு ஓடினேன். அரை கிமீ ஓடி மருத்துவமனை அடைந்தேன். ஆனால் என் அப்பா இறந்துவிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்’ என்றார் ரகுவர்.

ரகுவர் அம்மா, விமலா தேவி கூறும்போது, ‘அந்தப் போராட்டக்காரர்கள் வழி விட்டிருந்தால் என் கணவர் பிழைத்திருப்பார். இந்தப் போராட்டம் எங்கள் வாழ்க்கையை கொன்றுவிட்டது’என்று கண்ணீர் மல்கக் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com