மதுரை: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா?: எழும்பும் சந்தேகம்..!

மதுரை: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா?: எழும்பும் சந்தேகம்..!
மதுரை: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா?: எழும்பும் சந்தேகம்..!

மதுரையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


மதுரையில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மதுரை திருநகரைச் சேர்ந்த மணி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை “ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனம் கடன் வழங்கியதும், கட்டடத் திட்டம் தயாரிப்பது, டெண்டர் விட்டு கட்டுமானப் பணிகள் தொடங்குதல் உள்ளிட்டவைத் தொடங்கும் என்று கூறியுள்ளது. அதில் கடன் விவரங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் இல்லாததால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com