5 கோடி வெற்றிபெற்ற பிறகு வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது - சுஷில் குமார்

5 கோடி வெற்றிபெற்ற பிறகு வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது - சுஷில் குமார்
5 கோடி வெற்றிபெற்ற பிறகு வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது - சுஷில் குமார்

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 5இன் வின்னர் சுஷில் குமார். இதுவரை நடந்த அனைத்து சீஸன்களிலும் உட்சபட்ச பரிசுத்தொகையாக 5 கோடி வென்றவர் இவர். இந்த வெற்றிக்குப் பிறகு எடுத்த சில தவறான முடிவுகளால் வாழ்க்கையே மோசமாகிவிட்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுஷில்.

''கேபிசியில் வெற்றிபெற்ற பிறகு எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டத்தை சந்தித்தேன். போதை மற்றும் புகைப்பழக்கத்திற்கு ஆளானேன். தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் சில தவறான முடிவுகளால் மனைவியையும் பிரியவேண்டியதாயிற்று. 2015-2016க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த போட்டியில் வெற்றிபெற்ற பிறகு, அடுத்து என்னசெய்யப்போகிறோம் என்ற திட்டமிடல் இல்லை. போட்டியில் வெற்றிபெற்றதால் பல விழாக்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க என்னை அழைத்தார்கள். மாதத்தில் 15 நாட்கள் அதிலேயே சென்றுவிட்டது. அதற்குமேல் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பலர் பேட்டி எடுத்ததால் அவர்களிடம் கூறவேண்டும் என்றே சில தொழில்களின்மீது பணத்தை செலவிட்டேன். ஆனால அவை அனைத்தையும் இழந்துவிட்டேன்.

இதுதவிர குறைந்தது மாதம் 50 ஆயிரம் ரூபாயாவது நன்கொடையாக கொடுக்கவேண்டி இருந்தது. மேலும் பலரும் என்னை ஏமாற்றியதால் யாரை நம்பவேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் என் மனைவியையும் பிரிந்துவிட்டேன்.

திரைப்படங்களின்மீது ஆர்வம் செல்லவே, தினமும் லேப்டாப்பில் படம் பார்ப்பதையே தொழிலாக எடுத்துகொண்டேன். புகைப்பிடித்துக்கொண்டே படம் பார்ப்பேன். சினிமா எடுக்கவேண்டும் என்ற ஆசையால் மும்பை வந்தேன். ஆனால் முதலில் நாடகங்களில் பணியாற்றிவிட்டு வரும்படி கூறிவிட்டார்கள். நான் எழுதிய திரைக்கதையை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன்.

வாழ்க்கையைவிட்டு ஓடிப்போவதை உணர்ந்தேன். நமக்கு பிடித்த செயல்களை செய்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. பிரபலமானவராக இருப்பதைவிட நல்ல மனிதராக இருப்பதே சிறந்தது’’ என சுஷில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com