பசியால் சாலையிலேயே சரிந்துவிழுந்து இறந்த தொழிலாளி

பசியால் சாலையிலேயே சரிந்துவிழுந்து இறந்த தொழிலாளி
பசியால் சாலையிலேயே சரிந்துவிழுந்து இறந்த தொழிலாளி


உத்தரப் பிரதேச மாநிலத்தில் 60 வயதான புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 60 வயதான தொழிலாளி விக்ரம். இவர் கடந்த வியாழக்கிழமை தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஒரு நான்கு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்திற்குப் பயணித்துள்ளார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் கடைசியாகக் கடந்த வெள்ளிக்கிழமை உணவு உண்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழி நெடுகிலும் பிஸ்கட் மற்றும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு பசியைச் சமாளித்துள்ளார். வாகனத்தின் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்திற்குக் காலை 3 மணிக்கு வந்த விக்ரம், அங்கிருந்து தனது சொந்த மாவட்டமான ஹார்டோய் பகுதிக்கு நடைப்பயணமாகவே செல்ல முடிவெடுத்து நடக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் உடல் சோர்வின் காரணமாகவும் பசியின் காரணமாகவும் வலுவிழந்த விக்ரம் சாலையிலே சரிந்து விழுந்து இறந்தாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியை என்டிடிவி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com