அயோத்தியில் ராம ராஜ்ஜியம்: யோகி ஆதித்யநாத் விருப்பம்

அயோத்தியில் ராம ராஜ்ஜியம்: யோகி ஆதித்யநாத் விருப்பம்
அயோத்தியில் ராம ராஜ்ஜியம்: யோகி ஆதித்யநாத் விருப்பம்

அயோத்தியில் வளர்ச்சியின் மூலம் ராமராஜ்ஜியம் அமைக்க விரும்புவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை ஒட்டி அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ராம ராஜ்ஜியம் என்றால் வளர்ச்சி, ஏழ்மையற்ற ஏற்றத்தாழ்வுகள் அற்ற நிலை என குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு, மின்சாரம், மற்றும் சமையல் எரிவாயு வழங்குவதேத தங்கள் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். சிலர் தாம் என்ன சொன்னாலும் செய்தாலும் அதை விமர்சிப்பதை வாடிகையாக கொண்டிருப்பதாக ஆதித்யநாத் கூறினார். தாம் அயோத்திக்கு வந்தால் அது குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் வராவிட்டால் அயோத்தி வருவதற்க்கு தைரியமில்லை என விமர்சிப்பதாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் தீபங்கள் சரயு நதிக்கரையில் ஏற்றபட்டன. புஷ்பக விமானம் போல் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் ராம் கதா பூங்காவில் இறங்கியது. மற்றொரு ஹெலிகாப்டர் வானிலிருந்து மலர்களை தூவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com