பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு

பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு
பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநில ஆளுநருக்கான பதவி இடம் காலியாக உள்ள நிலையில் தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளத.

பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை பன்வாரிலால் புரோகித் வகிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித்தை நியமித்தார் குடியரசுத் தலைவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com