“உத்தராகண்ட் சுரங்க விபத்தில் எங்களுக்கு தொடர்பில்லை” - அதானி குழுமம் அறிக்கை!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தும் தீய எண்ணம் கொண்ட முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் அதானி குழுமத்துக்கு தொடர்பிருப்பதாக நேற்று பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அக்குழுமம், “துரதிஷ்டவசமான உத்தராகண்ட் சுரங்க விபத்தில் எங்களை தொடர்புபடுத்த சில சக்திகள் தவறான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்துபுதிய தலைமுறை

சுரங்கத்தின் கட்டுமானத்தில் அதானி குடும்பத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ எந்தவிதமான நேரடி மற்றும் மறைமுக தொடர்பு இல்லை. சுரங்க கட்டுமானத்தில் ஈடுபட்ட நிறுவனத்தில் எங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் அவர்களை மீட்கும் பணி 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com