நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி!

நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி!
நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி!

ஆந்திர மாநில தேர்தலில், நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. ஆட்சியை தக்க வைக்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டார்.

அதன்படி அவர், கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார். முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக, குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் போட்டியிடுகிறார். நகரி தொகுதியில், தற்போது எம்.எல்.ஏவாக உள்ள ரோஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நகரி தொகுதியில் நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை வாணி விஸ்நாத் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்டது. அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து இப்போது எந்த தகவலும் இல்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com