தமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை

தமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை
தமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை

தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி பாஜக என்றும், மற்ற கட்சிகள் அனைத்தும் வாரிசு கட்சிகளாகவே உள்ளன என்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 

சென்னையில் பாஜக அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழகத்தில் பாஜகவை சக்தி மிக்க கட்சியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக கூறினார்.

இதையும் படிக்கலாமே: பாஜகவில் இணைந்தார் நமீதா!

மேலும், “தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் என்பதை நீங்கள் எனக்கு கொடுத்த வரவேற்பின் மூலம் உணர்கிறேன். தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி பாஜக. மற்ற கட்சிகள் அனைத்தும் வாரிசு கட்சிகளாகவே உள்ளன. பாஜகவில் சாதாரண தொண்டரும் தலைவராக முடியும்” எனத் தெரிவித்தார். 

இதனிடையே பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்தவர்கள் ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதன்படி இன்று மாலை நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்தார். இன்று காலை நடிகர் ராதாரவியும் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com