கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: வீடியோ காட்சிகளை பார்வையிட்ட திலீப்

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: வீடியோ காட்சிகளை பார்வையிட்ட திலீப்
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: வீடியோ காட்சிகளை பார்வையிட்ட திலீப்

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகளை, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கொச்சி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பார்வையிட்டனர்.

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் ‌கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படும் வழக்கில், கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கூறப்படும் வீடியோவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என எதிர்தரப்பைச் சேர்ந்த திலீப் உள்ளிட்டோர் ‌உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து வீடியோவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திருந்தது. இந்த நிலையில் நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கொச்சி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அந்த வீடியோவை பலத்த பாதுகாப்புடன் பார்வையிட்டனர். வீடியோ‌தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com