\
ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! முழு விபரம்!

ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! முழு விபரம்!

ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! முழு விபரம்!
Published on

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காமல், பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, இணையதளம் மற்றும் செயலியில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, ஒருமாதத்தில் அதிகபட்சமாக 12 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற விதி தற்போது 24ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் ரயில் பயணிக்கும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com