மாடியில் இருந்து குதித்து போலீஸ் அதிகாரி தற்கொலை!

மாடியில் இருந்து குதித்து போலீஸ் அதிகாரி தற்கொலை!

மாடியில் இருந்து குதித்து போலீஸ் அதிகாரி தற்கொலை!

மத்திய டெல்லியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மூத்த போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மவுச்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரேம் பல்லப் குமார். வயது 55. ஏசிபி ரேங்க் போலீஸ் அதிகாரியான இவர், மத்திய டெல்லியில் போலீஸ் தலைமையகத்தில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல இன்று காலை அலுவலகத்துக்கு வந்த அவர், காலை 10 மணியளவில் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் திடீரென்று கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டா ர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் உடல் நிலை சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸ் இணை கமிஷனர் ராஜேஷ் குரானா தெரிவித்துள்ளார். மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த 16 ஆம் தேதி 35 வயதுடைய ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர், டெல்லி தலைமை செயலகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் இவரும் தற்கொலை செய்திருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com