உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர்; சிகிச்சை ஆரம்பித்த சில நிமிடத்தில் பிரிந்த உயிர்!

புதுச்சேரியில் உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஹேமசந்திரன்
உயிரிழந்த ஹேமசந்திரன் PT WEB

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட டி.வி.நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவர் மார்க்கெட்டி கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் {26} பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

இந்தநிலையில், ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக, சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த ஹேமசந்திரன் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஹேமசந்திரன்
சட்டீஸ்கர் | பூங்காவில் காதலர்களை விரட்டிவிரட்டி விசாரணை நடத்திய பாஜக எம்.எல்.ஏ... #Viralvideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com