இந்த ஆடியோவை கேட்டறிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமார், உடனே அவர்களிடம் தற்கொலை முடிவை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர்கள் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் சசிகுமார், தற்கொலை செய்யப்போவதாக கூறிய தம்பதியின் முகவரியை உடனடியாக கண்டுபிடித்து அங்கே செல்லுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், இந்த தம்பதியின் முகவரியை கண்டுபிடித்து அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். ஆனால் அதற்குள் தம்பதி தற்கொலை செய்துவிட்டதை பார்த்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.