யமுனா நதியின் அசுத்தமான நீரில் பிரார்த்தனை செய்த பெண் - வீடியோ

யமுனா நதியின் அசுத்தமான நீரில் பிரார்த்தனை செய்த பெண் - வீடியோ
யமுனா நதியின் அசுத்தமான நீரில் பிரார்த்தனை செய்த பெண் - வீடியோ

சாத் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள யமுனா நதியின் அசுத்தமான நீரில் பெண் ஒருவர் பிரார்த்தனை செய்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம்.

நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில், முதல் நாள் பாரம்பரிய உணவு வகைகளுடன் விருந்து படைப்பார்கள். இரண்டாவது நாள் உண்ணா விரதம் இருப்பார்கள். மூன்றாவது நாள் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நின்றபடி சூரியனை வழிபடுவார்கள். நான்காவது நாள், சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் வழிபடுவார்கள். 

இந்நிலையில், சாத் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள யமுனா நதியின் அசுத்தமான நீரில் பெண் ஒருவர் பிரார்த்தனை செய்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com