இந்தியா மற்றும் நேபாள எல்லையில் பித்தோராகர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் மூன்று மாடி கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள தார்ச்சுலா நகரில் வெள்ளிக்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தரை பகுதிகளில் உள்ள மண் தடுப்புகளில் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டமும் அங்கு கணிசமாக உயர்ந்துள்ளது.