பெங்களூர் : இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம் : உயிர் தப்பிய மக்கள்!

பெங்களூர் : இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம் : உயிர் தப்பிய மக்கள்!

பெங்களூர் : இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம் : உயிர் தப்பிய மக்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அதில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் துரிதமாக தீயணைப்பு படையினரால் வெளியேற்றப்பட்டதால் உயிர் தப்பி உள்ளனர். 

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கட்டடம் ஆட்டம் கண்ட நிலையில் இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளிகள் தங்கி வந்துள்ளனர். 

மக்கள் இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அனைவரையும் தக்க சமயத்தில் வெளியேற்றி உயிர் காத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com