கடந்த 3-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடந்ததைத் தொடர்ந்து, கப்பலில் அதிரடி சோதனை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப்பொருளை கைப்பற்றினர். இதில், சொகுசு கப்பலில் பயணித்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை கைதாகி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.