மிஷன் சக்தி திட்டம் 6 மாதத்துக்கு முன்புதான் முழு வடிவம் பெற்றது-சதீஷ் ரெட்டி தகவல்

மிஷன் சக்தி திட்டம் 6 மாதத்துக்கு முன்புதான் முழு வடிவம் பெற்றது-சதீஷ் ரெட்டி தகவல்

மிஷன் சக்தி திட்டம் 6 மாதத்துக்கு முன்புதான் முழு வடிவம் பெற்றது-சதீஷ் ரெட்டி தகவல்
Published on

மிஷன் சக்தி திட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு‌தான் முழுமையாக செயல் வடிவத்துக்கு வந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைத் திட்டமான மிஷன் சக்தி நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இது பழைய திட்டம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் சதீஷ் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.

மிஷன் சக்தி திட்டம் கடந்த இரு ஆண்டுகளாக ஆய்வு நிலையில் இருந்து வந்ததாகவும் பிரதமர் மோடியின் அனுமதிக்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தயார் நிலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மிஷன் சக்தி திட்டத்துக்காக நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ப்ரித்வி ஏவுகணையைத் தழுவி ஏ-சாட் ஏவுகணை உருவாக்கப்படவில்லை என்றும் இது ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் செயற்கைக்கோளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது என்றும் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com