ரயில்வே சுரங்கப் பாதையை சூழ்ந்த மழைநீர்: காரில் சிக்கிக்கொண்ட புதுமணப் பெண் உயிரிழப்பு

ரயில்வே சுரங்கப் பாதையை சூழ்ந்த மழைநீர்: காரில் சிக்கிக்கொண்ட புதுமணப் பெண் உயிரிழப்பு
ரயில்வே சுரங்கப் பாதையை சூழ்ந்த மழைநீர்: காரில் சிக்கிக்கொண்ட புதுமணப் பெண் உயிரிழப்பு
திருப்பதியில் மழை வெள்ளத்தில் கார் மூழ்கியதில், புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சந்தியா என்ற புதுமணப்பெண், தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பதியில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. எம்ஆர் பள்ளி சாலை அருகே கார் சென்ற போது, அங்கிருந்த ரயில்வே சுரங்கப் பாதையில் இருந்த நீரில் கார் மூழ்கியது.
இதில் காரில் இருந்தவர்கள் உடனடியாக தப்பித்த நிலையில், சந்தியா மட்டும் காருக்குள் சிக்கியதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தண்ணீரின் அளவு தெரியாமல், ரயில்வே சுரங்கப்பாதை அருகே காரை இயக்கிச் சென்றதாலேயே நீரில் மூழ்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com