”தாங்க முடியாத வேதனைகளை சுமந்து வாழ்ந்தார்..” ஜானகி மறைவுக்கு இளையராஜா இரங்கல்!
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு காரணமான உடல்நலக்குறைவால் மைசூரில் காலமானது இசை உலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவால் ஆழ்ந்த துக்கமடைந்த இளையராஜா, ஜானகி அம்மாளின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, பல்வேறு இசைப் பாணிகளில் அவர் வெளிப்படுத்திய இணையற்ற திறமை குறித்து நினைவுகூர்ந்து, இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது என இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் காலமானார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த இசைஞானி இளையராஜா, அவரது ஈடு இணையற்ற உழைப்பை நினைவுகூர்ந்ததோடு, இசை உலகிற்கு ஏற்பட்டுள்ள இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.
ஜானகி மறைவு குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் இளையராஜா, “ஜானகி அம்மாளின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துக்கமடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன். தனது வாழ்வில் தாங்கமுடியாத துக்கங்களை, நிகழ்வுகளைத் தாங்கி அவர்கள் வாழ்ந்தார்கள்.
ஒரு மிகச்சிறந்த திறமைசாலி என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வந்தார். மேலும் அவரை அயராது உழைக்கும் கலைஞர் என்று இளையராஜா குறிப்பிட்டார். தனது இசைப் பணிகளில் பெரும் அர்ப்பணிப்பு உணர்வை ஜானகி அம்மாள் கொண்டிருந்தார் என்று இளையராஜா சுட்டிக்காட்டினார். தான் விரும்பிய உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த, தனது அறிவுறுத்தல்களையும் இசைக்கருவி அமைப்புகளையும் அவர் மிகச் சரியாகப் பின்பற்றுவார். இணையற்ற திறமை கொண்டவர். பல்வேறு இசைப் பாணிகளிலும் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய அவரது இணையற்ற திறமையை பாராட்டிய இளையராஜா, அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

