ரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு

ரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு
ரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேஷனில் பொருள் வாங்க முடியாததால் பசியால் வாடி பழங்குடியின பெண்மணி உயிரிழந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டம் டும்ரி பகுதியை சேர்ந்த 58 வயது பெண்மணி சாவித்திரி தேவி. இவருக்கு ரேஷன் கார்டு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே வறுமையில் வாடி வந்த நிலையில் ரேஷன் பொருளும் கிடைக்காமல் மூன்று நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த சாவித்திரி தேவி, பசியால் வாடி உயிரிழந்ததாக குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் பொருள் கிடைக்காமல் பசியால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com