நிர்பயா குற்றவாளிகள் தூக்கு நிறுத்தி வைப்பு !

நிர்பயா குற்றவாளிகள் தூக்கு நிறுத்தி வைப்பு !
நிர்பயா குற்றவாளிகள் தூக்கு நிறுத்தி வைப்பு !

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 4 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவி்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் நாளை காலை தூக்கிலிடப்பட இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த நால்வரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனுவை இன்று பிற்பகல் 12 மணிக்கு அனுப்பியிருந்தார் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார். கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்காததால் 4 பேரின் தூக்கு தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதே சமயம் குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் குடியரசுத் தலைவராலும், சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, நான்கு பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, கருணை மனு, மேல்முறையீட்டு மனு என குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் இருந்த நிலையில், பவன்குமார் குப்தாவை தவிர மற்ற இருவரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 4 பேரின் தூக்கு தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com