புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு, கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகள் 14 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமானார்கள். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மாயமான மாணவர்களைத் தேடியுள்ளனர். அப்போது மாணவி ஹேமலதா உடல் மட்டும் சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கடலோர காவல்படை போலீசார் கடலில் மாயமான இரண்டு மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த மாணவி ஹேமலதாவின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.