கேரளா: ஓட்டுநர் இல்லாமல் திடீரென சாலையில் ஓடிய கார் - பரபரப்பு வீடியோ!

கேரளாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
car
carpt desk

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் ஒன்று, திடீரென ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி நகர்ந்தது. வாகன நெரிசல் மிகுந்த சாலையில் அது திடீரென ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

car
carpt desk

காருக்குள் பயணிகள் இருக்கையில் இருந்த பெண் ஒருவர், கூச்சலிட்டபடி காரிலிருந்து வெளியே குதித்து ஒடிவருவது, அப்பகுதி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அப்பயணி வெளியே வருவதை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு காருக்குள் தாவி ஏறி பிரேக் போட்டு காரை நிறுத்திகிறார். இதையடுத்து காருக்குள் இருந்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாகன நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் டிரைவர் இல்லாமல் ஓடிய காரை இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உடனடியாக செயல்பட்டு நிறுத்தியது பலரது பாராட்டை பெற்றது. அவரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என பாராட்டு தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்!.

இதுதொடர்பான வீடியோவை இங்கே காண்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com