மரத்துப்போன மனிதநேயம்: ரூ 1,500 கடனுக்காக இளைஞருக்கு இழைக்கப்பட்ட உச்சகட்ட கொடூரம்!

மரத்துப்போன மனிதநேயம்: ரூ 1,500 கடனுக்காக இளைஞருக்கு இழைக்கப்பட்ட உச்சகட்ட கொடூரம்!
மரத்துப்போன மனிதநேயம்: ரூ 1,500 கடனுக்காக இளைஞருக்கு இழைக்கப்பட்ட உச்சகட்ட கொடூரம்!

வாங்கிய கடனை திருப்பித் தராமல் காலம் கடத்தியதால் இளைஞர் ஒருவர் கயிறு கட்டி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் ஒடிஷா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிஷாவின் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், 1500 ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தர கால தாமதம் செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் பணத்தை கொடுத்தவர் ஆத்திரமடைந்து, 4 இருசக்கர வாகனங்களில் 8 பேரை அழைத்து சென்று, கடன் வாங்கியவர் கையில் கயிறு கட்டி சாலைகளில் இழுத்துச் சென்றுள்ளார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: வாய்த்தகராறில் தொடங்கி மோதலில் முடிந்த சண்டை - ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட இளைஞர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com