குஜராத்: செல்போன் வெடித்து 17 வயது மாணவி உயிரிழப்பு; சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம்

குஜராத்: செல்போன் வெடித்து 17 வயது மாணவி உயிரிழப்பு; சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம்
குஜராத்: செல்போன் வெடித்து 17 வயது மாணவி உயிரிழப்பு; சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம்
குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்தார்.
 
மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரதா தேசாய் என்ற மாணவி, செல்போனை சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என மாணவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com