“3 லட்ச ரூபாய் வேண்டும்”-7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன்!

“3 லட்ச ரூபாய் வேண்டும்”-7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன்!
“3 லட்ச ரூபாய் வேண்டும்”-7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன்!

ஹைதராபாத்தில் 7 வயது சிறுவனை 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் பணத்திற்காக கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் 7 வயது சிறுவனை மர்ம நபர் கடத்திச்சென்றார். பின்னர் கடத்தப்பட்ட சிறுவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் பேசிய நபர் மகனை விடுவிக்க வேண்டுமென்றால் 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்.

(கடத்தலில் ஈடுபட்ட சிறுவன்)

உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை கைது செய்துள்ளனர்.  7 வயது சிறுவனை 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் பணத்திற்காக கடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com