பதறிப்போன பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள். வீரச்சிறுவனின் முகம் மற்றும் தலையில் 90 தையல்கள் போடும் அளவிற்கு நாய் கடித்திருப்பதைப் பார்த்து டாக்டர்களே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். நடந்த சம்பவம் குறித்து சிறுவன் பிரிட்ஜரின் அத்தை நிக்கி வாக்கர் பேசியபோது, அவன் கூறிய வார்த்தைகள்தான் இன்னும் வீரமிகுந்தது. ‘என் கண் முன்னால் யாராவது சாகப்போவது தெரிந்தால், அது என் சாவு போன்றது. அது, நானாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன். இன்னொருவரை, சாகவிடமாட்டேன். அதனால்தான் நாயுடன் சண்டை போட்டேன்’ என்றுக்கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளான்.