டெல்லி: சரோஜ் மருத்துவமனையின் 80 மருத்துவர்களுக்கு கொரோனா; மூத்த அறுவைசிகிச்சை நிபுணர் பலி

டெல்லி: சரோஜ் மருத்துவமனையின் 80 மருத்துவர்களுக்கு கொரோனா; மூத்த அறுவைசிகிச்சை நிபுணர் பலி
டெல்லி: சரோஜ் மருத்துவமனையின் 80 மருத்துவர்களுக்கு கொரோனா; மூத்த அறுவைசிகிச்சை நிபுணர் பலி

டெல்லி சரோஜ் மருத்துவமனையில் இதுவரை 80 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா பாதிக்கப்பட்ட 80 மருத்துவர்களில், 12 பேர் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மருத்துவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். 27 ஆண்டுகளாக சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றிய மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் .கே.ராவத் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

டெல்லி மருத்துவமனைகளில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரோஜ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அனைத்து வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவும் இப்போது மூடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com