ஆந்திரா
ஆந்திராமுகநூல்

ஆந்திரா| பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து; 8 பேர் பரிதாப மரணம்!

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Published on

ஆந்​திர மாநிலம் அனகாபல்லி மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கொத்​தவுட்ல மண்​டலம் கைலாசபுரத்​தில் உள்ள பட்​டாசு தொழிற்​சாலை​யில் நேற்று (13.4.2025) மதி​யம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. சிறுது நேரத்திலே ஆலைமுழுவதும் தீப்பரவ அங்கிருந்த பட்டாசுகள் சரமாறியாக வெடிக்க துவங்கினர். இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால், 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயடைந்த 7 பேர் நரசிபட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பலரும் கிழக்கு கோதாவரி மாவட்​டம் சமர்​ல​கோட்டா கிராமத்தை சேர்ந்​தவர்​கள் என தெரிய​வந்​துள்​ளது.

இந்நிலையில், எதனால், இந்த விபத்து ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரா
Headlines |அதிகரிக்கும் வெப்பநிலை முதல் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக விஜய் வழக்கு வரை!

தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்ள ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் தலை​வர் ஜெகன் மோகன் ரெட்​டி, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு தேவை​யான உதவி​களை அரசு செய்ய வேண்​டும் என வலியுறுத்தி உள்​ளார் இதற்கிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com