தந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது

தந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது
தந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது

சொத்து தகராறு காரணமாக தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி கொலை செய்த மகன் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் மகிஷாடல், ஜியோன்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபட மாலிக்(78). இவருக்கு தனது மூத்த மகன் நாராயணன் மாலிக்குடன் சொத்து தகராறு இருந்து வந்ததால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஹரிபட மாலிக் மீது ஜன்னல் வழியாக நாராயணன் மாலிக்கும் அவரது மனைவி தனுஸ்ரீயும் மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

அப்போது நாராயணன் மாலிக் மற்றும் அவரது மனைவி தனுஸ்ரீ ஆகியோர் அங்கிருந்து ஓடுவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஹரிபட மாலிக்கை மீட்டு அப்பகுதியினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் மாலிக்கையும் அவரது மனைவி தனுஸ்ரீயையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com