பிரதமர் தொகுதியில் 70 வயது பிரெஞ்ச் மூதாட்டி பாலியல் பலாத்காரம்!

பிரதமர் தொகுதியில் 70 வயது பிரெஞ்ச் மூதாட்டி பாலியல் பலாத்காரம்!
பிரதமர் தொகுதியில் 70 வயது பிரெஞ்ச் மூதாட்டி பாலியல் பலாத்காரம்!

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 70 வயது பிரெஞ்ச் மூதாட்டி அடித்து துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 1977-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தற்போது இந்தியாவில் கடந்த 11 மாதங்களாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள ஒரு இடத்தில் வாடகை விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவில், சுதா தங்கியிருந்த வாடகை விடுதியின் காவலாளி, சுதாவின் செல்போனை பறித்ததோடு, அவரை கடுமையாக அடித்துள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாரணாசி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாகும். இதோடு மட்டுமில்லாமல் உத்தரபிரதேத்தில், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக-வின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், பெண்களுக்கு எதிரான குற்றச் செயலலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். யோகி ஆத்தியநாத்தின் 100 நாள் ஆட்சி இந்த வாரத்தோடு முடிகின்ற நிலையில், அங்கு கடந்த 100 நாட்களில் மட்டும், பெண்களுக்கு எதிராக 16,152 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 11922 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உ.பி.யின் முக்கிய பகுதியான வாரணாசியில் அயல்நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com