பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

”கொரோனா காலகட்டமான இந்த இக்கட்டான சூழலில் 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும்” என்று குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர்.

ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று விடுவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் நேரில் அளித்தார் டி.ஆர் பாலு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com