\
மத்திய பிரதேசத்தில் அடுக்கு குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் அடுக்கு குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் அடுக்கு குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு அடுக்கு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தூரில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டடம் முழுவதும் பரவிய நிலையில், தீயில் கருகி 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், என்ன நடப்பது என தெரிவதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர்.






logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com