உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி நகரில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் வினிதா என்கிற கர்ப்பிணிப் பெண் (26 வயது), தனது கணவர், 6 வயது மகள், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று கர்ப்பிணியின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். செவிலியராக இருக்கும் அவரது மாமியார் அன்றிரவு பணிக்கு சென்றுவிட்டார். இதனால் தனது 6 வயதான பெண் குழந்தையுடன் வினிதா இரவில் தனியாக இருந்துள்ளார்.