ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள ஹான்சன் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதீத கனமழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளப்பெருக்கு, வீடுகள் மற்றும் கட்டடங்களை அடித்துச் சென்றது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஹான்சன் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.