பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு
Published on

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய மத்திய அரசு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com