ரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்

ரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்
ரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ரயிலில் கடத்த முயன்ற 500 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கடந்த 29 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து அஹமதாபத்திற்கு நவ்ஜீவன் ரயிலில் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணி ஒருவர் 500 இந்திய நட்சத்திர ஆமைகளை பேக்கில் வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், 500 ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீட்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நட்சத்திர ஆமைகள் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com