\
2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகன்.. காட்டுமிராண்டித்தனமாக அடித்த தந்தை

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகன்.. காட்டுமிராண்டித்தனமாக அடித்த தந்தை

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகன்.. காட்டுமிராண்டித்தனமாக அடித்த தந்தை
Published on

அகமதாபாத்தில் இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகனை அவரது தந்தை கடுமையாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அகமதாபாத் தரியபூர் பகுதியைச் சேர்ந்தவர் நயிமுதின் சேக்(50). இவரது மகன் யாஹ்யா சேக். நயிமுதின் அவரது குடும்பத்தை விட்டு கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழந்து வருகிறார். யாஹ்யாவும் அவரது தாயார் ஜுபேதாபானுவும் நயிமுதின் குடியிருக்கும் அபார்ட்மெண்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். நயிமுதின் தரைதளத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நயிமுதின் சேக் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. இதற்கு யாஹ்யா மறுப்பு தெரிவிக்கவே நயிமுதின், யாஹ்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், யாஹ்யாவுக்கு தோள்பட்டை, கன்னம் மற்றும் அவரது முதுகு பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. யாஹ்யாவை நயிமுதின் தாக்கும்போது அவரது முதல் மனைவி ஜுபேதாபானு தடுக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்மீதும் தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து யாஹ்யா அளித்த புகாரின்பேரில் அவரது தந்தைக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com