இந்தியா
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் பிமாராம், அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, மீட்பு பணி நடைபெற்று வந்தது.
சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு குழி தோண்டப்பட்டது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

