பறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் !

பறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் !

பறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் !
Published on

பறவை முட்டையை உடைத்த சிறுமிக்கு வீட்டில் நுழைய 11 நாட்கள் தடை விதித்த கிராம பஞ்சாயத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. 

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள கிராமம் கோடா. இங்கு கடந்த ஜூலை மூன்றாம் தேதி குஷ்பு என்ற சிறுமி முதன் முதலில் பள்ளிக்கு முதலாம் வகுப்பு சென்றுள்ளார். அதற்காக அங்கிருந்த கோயில் ஒன்றில் ஊர்மக்கள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. பூஜையின் போது கூட்டமாக இருந்ததால் தடுமாறி விழுந்த சிறுமி பறவை ஒன்றின் முட்டையை எதிர்பாராத விதமாக உடைத்துவிட்டார். அது மழையை கணிக்கும் பறவையின் முட்டை என அந்த ஊர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இதனால் குழந்தை முட்டையை உடைத்ததால் தெய்வக்குத்தம் ஆகிவிட்டது, அதை போக்க பரிகாரங்கள் செய்ய வேண்டும் என ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

பரிகாரமாக சிறுமியை அங்கிருக்கும் கோயில் ஒன்றில் குளிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் வாசனை திரவியம், ஒரு வகை மீன், மதுபாட்டில்கள் ஆகியவற்றை படைக்க வேண்டும். பின்னர் பசு மாடுகளுக்கு உணவளிக்க வேண்டும். புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அத்துடன் குழந்தையை 8 நாட்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்ட சிறுமியின் தந்தை, கடுமையாக எதிர்த்துள்ளார். அத்துடன் நீண்ட நேரம் வாக்குவதாம் செய்துள்ளார். அவர் செய்த வாக்குவாதத்தால் குழந்தை வீட்டில் நுழைய வேண்டும் என்ற 8 நாட்கள் தடை, 11 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரின் பகையை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமல் சிறுமியின் குடும்பத்தினரும், பரிகாரத்தை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சிறுமி வீட்டிற்கு அனுமதிக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தடி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நேற்று காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் வீட்டில் அனுமதிக்குமாறு சமரசம் பேசியுள்ளனர். ஆனால் கிராம மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமியை செய்த பாவத்திற்கு, அவரை தூய்மைப்படுத்தவே இவ்வாறு செய்வதாக கிராம மக்கள் வாதம் செய்துள்ளனர். இதையடுத்து விவகாரம் ஊடங்களின் பார்வைக்கு வர, கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மனித உரிமையை ஆணையம் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியம் புகார் அளிக்கவுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com