டெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி
டெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி

டெல்லியில் ஜாகீர்நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 

டெல்லி ஜாகீர்நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com