சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 5 பேர் பலி

சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 5 பேர் பலி
சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 5 பேர் பலி

பீகாரில் தனியார் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியாயினர். 9 பேர் படுகாயமடைந்தனர். 

பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சாசா மூசா சர்க்கரை ஆலை. தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் சுமார் 100 பேர் வேலை செய்கின்றனர். இங்குள்ள பாய்லர் அதிக வெப்பம் காணமாக இன்று காலை 11.35 மணியளவில் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்க்கரை ஆலையின் உரிமையாளர் முகமது அலியின் வீட்டை கல்லால் தாக்கினர். அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் ஆலையில் ஏராளமானோர் கூடியுள்ளதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து போலீசார் சர்க்கரை ஆலை உரிமையாளர் முகமது அலியை கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com