கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது .
விபத்தில் சரக்கு ரயிலின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இருப்பினும், இந்த விபத்தால், உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.