காஷ்மீர்: ஷோபியனில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஒருவர் சரண்

காஷ்மீர்: ஷோபியனில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஒருவர் சரண்
காஷ்மீர்: ஷோபியனில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஒருவர் சரண்

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர்.

கிலோரா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் தகவல்கள் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், ஒரு பயங்கரவாதியை உயிருடன் பிடித்தனர். அவனின் பெயர் ஷோயிப் அகமது பட் என காஷ்மீர் ஐ.ஜி விஜய் குமார் அடையாளம் காட்டினார்.

இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இருவர் ஷாகூர் பரே, அல் பத்ர் இவர்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மேலும் கான்மோவின் பஞ்சைக் கடத்தி கொலை செய்த சுஹைல் பட் என்பவரும் கொல்லப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.க்கள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. மேலும் இப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com